
சாத்தான்குளத்தில் காவல்துறை ஊராட்சி மன்றம் மின்சார வாரியத்தை கண்டித்து குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளி குடும்பத்தினருடன் கைது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நகை தொழிலாளர் மூக்காண்டி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக குறிப்பிட்ட அந்த நிலத்தில் உள்ள உடை மரங்களை எதிர் மனுதாரர் வெட்டியுள்ளார். இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல்துறையை கண்டித்தும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் அந்த இடத்திற்கு தீர்வு ரசீது வழங்கிய ஊராட்சி¢மன்றத்தை கண்டித்தும் மின்சாரம் வழங்கிய மின்வாரியதுறையை கண்டித்தும் தொடர்ந்து 7 நாட்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இன்று காலை துவங்கினார்.
அதற்காக சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு தனது குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.