
பசுமை தமிழ் தலைமுறை சார்பாக ஏழைமக்களுக்கு காய்கறிகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு நடந்தது.
கோரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு. அதன் ஒரு பகுதியாக ஏழை மக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை கீழப்புத்தனேரி கிராம நிர்வாக அதிகாரி முத்து சகுந்தலா தொடங்கி வைத்தார். உடன் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிர்வாகிகள் அரியமுத்து, மகாராஜன், சுகன் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.