தூத்துக்குடி- சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி- சென்னை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 11:30 மணிக்கு புறப்படும். இதுபோல் தாம்பரத்தில் இருந்து ஜூலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மாலை 03:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுநாள் 12- 30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
நிறுத்தங்கள் : தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு.
இதுபோல் வண்டி எண் 06017 சென்னை தாம்பரத்தில் இருந்து ஜூலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மாலை 03:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். தற்போது இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு ரயில்களை வழங்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.


