ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்காக இடம்.
தமிழக அரசு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் காரணமாக அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்து சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைப்பொறுத்தவரை 4 மாணவிகள் இந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதில் ஸ்ரீவைகுண்டம் ஆதிகுமர குருபர சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வேல்மதிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
இதனை பாராட்டும் விதமாக நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேல்மதி உள்பட 4 பேரையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டினார்.


