கோவில்பட்டி நகராட்சியின் (பொறுப்பு) ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மாற்றப்பட்டு, புதிய பொறுப்பு ஆணையராக வீரமுத்துகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி நகராட்சி ஆணையருக்கான முழு கூடுதல் பொறுப்பில் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் அ. ஜஹாங்கீர் பாஷா கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமித்து கடந்த 14.07.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிர்வாக நலன் கருதி தற்போது ரத்து செய்யப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உதவி ஆணையர் ஏ. வீரமுத்துகுமார் மறு உத்தரவு வரும் வரை கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆணையர் உடனடியாகக் கோவில்பட்டி நகராட்சியில் பொறுப்பேற்று, அதற்கான அறிக்கையை உடனடியாக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


