தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று நேற்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 219 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 17 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 667ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 144 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 408 ஆக உள்ளது.