சீமா 1957 மே 22 இல் பிறந்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்கள், 20 தமிழ்ப் படங்கள், ஏழு தெலுங்குப் படங்கள், நான்கு கன்னடப் படங்கள் ஆகியவற்றிலும் ஒரு இந்திப் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தனது 14 ஆவது வயதில் நடனமாடுபவராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் லிசா பேபி இயக்கத்தில் நிழலே நீ சாட்சி என்ற படத்தில் ஒரு நாயகியாக நடித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அப்படம் நடிகர் விஜயன், விது பாலா ஆகியோர் நடிப்பில் அதே பெயரில் வெளிவந்தது.
தனது 19 ஆவது வயதில் நாயகியாக தனது முதல் படமான இயக்குநர் ஐ. வி. சசியின் இயக்கத்தில் வெளிவந்த “அவளுட ராவுகள்” என்ற படத்தில் அறிமுகமானார்.[2] சீமா மிக அதிகமானப்படங்களில் நடிகர் ஜெயனுடன் நடித்துள்ளார், சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியுடன் 47 படங்களில் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தனது “மஹாயானம்” படத்திற்குப் பிறகு சிறிது காலம் திரையுலகிலிருந்து விலகியிருந்தார். சீமா மீண்டும் 1998 ஆம் ஆண்டில் “ஒலிம்பியா அந்தோனி ஆடம்” என்றப் படத்தின் மூலம் திரைக்கு வந்தார். சீமா 1984 ஆம் ஆண்டிலும் 1985 ஆம் ஆண்டிலும் சிறந்த நடிகைக்கான கேரளா மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.