
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை மிகவும் சிறப்பு பெற்றது. இந்த மலையில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் ஏற்பாட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இலவச நூலகம், தினமும் அன்னதானம் உள்பட பல்வேறு சமூக பணிகளுடன் ஆன்மிக பணிகளும் நடந்து வருகிறது. தோரண மலையை சுற்றி பௌர்ணமி கிரிவலம் துவங்கி தற்போது சிறப்பாக நடந்து வருகிறது. பக்தர்கள் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. எனவே பக்தர்கள் கிரிவலம் சென்று வர சிரமாக இருந்தது. இதனால் இதுகுறித்து பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் கிரிவல பாதையை அமைத்து தரவேண்டும் என்று ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியனிடம் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியன் சட்டபேரவை கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பினார்.
இந்தகேள்விக்கு இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , தோரணமலை முருகன்கோயில் கிரிவல பாதை பணி அடுத்த மூன்று மாதங்களில் துவங்கும் என்று பதிலளித்தார்.
கேள்வி கேட்ட ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியன், பதில் கூறிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தமிழக அரசுக்கு தோரணமலை முருகன்கோயில பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் நன்றி கூறினார்.