
செய்துங்கநல்லூர் மற்றும் நாட்டார்குளத்தில் இயங்கி வரும் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
மழலையர் பட்டமளிப்பு விழா -கிருஷ்ணாபுரம் பாலன் மகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெய்தூன் பீவி தலைமை வகித்தார். ஜெசி அப்துல் கனி முன்னிலை வகித்தார் . ரஹ்மத் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஞான சௌந்தரி கலந்துகொண்டு, மழையர்களுக்கு பட்டம் வழங்கினார். திருச்செந்தூர் நில எடுப்பு தாசில்தார் அய்யனார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி கௌரவித்தனர். ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.