
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு.திறந்தவெளி அருங்காட்சியக பணிக்காக வரு வாய்த்துறையினர் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகே கீழடியில் இது வரை7 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அக ழாய்வானது கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்க ளில் நடந்தன. இதுவரை நடந்த அகழாய்வுகளில் தங்கம் உட்பட பல்வேறு அணிகலன்கள், முதுமக் கள் தாழி, கட்டிட தொடர்ச்சி, பானைகள், பழங்கால கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத் தன. 7ம் கட்ட அகழாய்வு பணி கள் கடந்த செப்டம்பர் இறுதியில் நிறைவடைந்தன.
அடுத்தக்கட்டமாக அக ழாய்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. நேற்று முன் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி, வெம்பக்கோட்டை உட் பட 7 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெறுமென அறி வித்தார். இதனையடுத்து கீழடி யில் 8ம் கட்ட அகழாய்வு பணிக் கான அளவீடு பணிகள் துவங்கிஉள்ளன.
கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கதிரேசன் என்பவரது நிலத்தில் நடந்தது. இதில் உலைக லன், இணைப்பு குழாய் பானை கள், தமிழகத்திலேயே மிகப்பெரிய 32 அடுக்குகள் கொண்ட உறைகி ணறு, சரிந்த கூரை ஓடுகள் உள் ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. பின்னர் உறை கிணறு உள்ளிட்டபொருட்களின் மேல் தார்ப்பாய் விரிக்கப்பட்டு மண் கொண்டு மூடப்பட்டது.
இந்நிலையில் நேற்று கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிக்காக வும், திறந்தவெளி அருங்காட்சிய கம் அமைக்கவும் வருவாய்த்துறை சார்பில் கதிரேசன் நிலத்தில் அள வீடு பணிகள் நேற்று நடந்தன. தற்போது மொத்தம் ஒரு ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 சென்ட் பரப்பளவில் தான் கடந்த லீம் கட்ட அகழாய்வு நடந்தது. எனவே மீதமுள்ள இடத்தை 8ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. உரிய அனு மதி கிடைத்த பின் 8ம் கட்ட அக ழாய்வு பணிகள் மேற்கொள்ளப்ப டும் என தெரிகிறது