
முறப்பநாட்டில் ஆற்றுமணல் திருட்டு வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலிசார் கைது செய்தனர்.
கடந்த 14.09.2017 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் தாமிரபரணி ஆற்றுப்படுகயில் அனுமதியின்றி சட்டவிரோதமாக லாரியில் மணல் திருடிய வழக்கில் அகரம் பகுதியை சேர்ந்த நயினார் மகன் கோபால் (45) என்பவர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர் இன்னோஸ்குமார், முதல்நிலை காவலர்கள் சுரேஷ்குமார் மற்றும் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய போலீசாரை தலைமறைவாக உள்ள குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் போலீசார் இன்று தலைமறைவாக இருந்த குற்றவாளி கோபாலை கைது செய்தனர்.
4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்த முறப்பநாடு காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.