
குறுக்குச்சாலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1.10 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குறுக்குச்சாலையில் மக்கள் தொடர்பு மமுகாம் நடந்தது நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி விமார்கண்டேயன் முன்னிலை வைத்தார்,
விழாவில் சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு 1 கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் உலகநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.