தூத்துக்குடியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியை சேர்ந்த எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியை கையில் ஏந்தி பத்மாசனம் செய்து சாதனை படைத்தனர்.
நாட்டின் 78 சுதந்திர தினம் நாளை 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தினத்தை மக்கள் எழுச்சியோடு கொண்டாடும் வகையில் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவுகளிடம் தேசப்பற்றை வளர்க்கும் விதமாக தேசியக்கொடி ஏந்தியவாறு யோகாசனம் செய்யும் நிகழ்வு உலக சாதனைக்காக நடத்தப்பட்டு வருகிறது
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த எல்கேஜி யுகேஜி வகுப்பு படிக்கும் 134 மாணவ மாணவிகள் பத்மாசனம் செய்தபடி இரண்டு கைகளிலும் தேசிய கொடியை ஏந்தி அசைத்தவாறு 78 வினாடிகள் உலக சாதனை நிகழ்விற்காக யோகாசனம் செய்தனர் மழலை குழந்தைகளின் இந்த கண்கவர் யோகாசன நிகழ்ச்சி அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்


