தூத்துக்குடி மாசிலாமணிபுரம் பகுதியில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தி புவனேஷ் ராம், முதன்மை நிதி அலுவலர் (நாப்கிசான்) இம்மானுவேல் கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் , நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ஸ்வர்ணலதா மற்றும் வங்கியின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


