தூத்துக்குடி மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு குளங்கள், கால்வாய்கள் மற்றும் அணைக்கட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டுப் களஆய்வு மேற்கொண்டார்.
நாட்டார் குளம், செய்தூங்கநல்லூர் தூதிகுழி குளம், வெள்ளூர் குளம், வெள்ளமடம் தென்கரை குளம், முதலைமொழி குளம் மற்றும் கீழப்புதுக்குளம் கிராமத்தில் உள்ள குளம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.
செய்தூங்கநல்லூர், கால்வாய் கிராமம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள் வழியாகச் செல்லும் மருதூர் மேலக்கால்வாய்/கீழக்கால்வாய் பகுதிகளைப் பார்வையிட்டுத் தூர்வாரும் பணிகள் மற்றும் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தார்.
சுப்பராயபுரம் அணைக்கட்டுப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர், தொடர்ந்து சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோவில் அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது நீர்வளத்துறை அதிகாரிகளுடன் உடனிருந்து, நீர்நிலைகளைப் பராமரித்தல் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.


