
தூத்துக்குடி – பாலக்காடு “பாலருவி” எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 18 பெட்டிகளுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வரை பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ரயில் சேவையை வருகிற 15ஆம் தேதி பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி துவக்கி வைக்கிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி – பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு தூங்கும் வசதி பெட்டி மற்றும் மூன்று பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகிறது. வண்டி எண்: 16791 திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 14-08-2024 முதல் நான்கு பெட்டிகள் கூடுதலாக சேர்க்கப்படும்.
வண்டி எண்: 16792 பாலக்காடு – திருநல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 15-08-2024 முதல் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும். ஏற்கனவே 14 பெட்டிகளுடன் இயங்கிய நிலையில் இனி 18 பெட்டிகளுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.