
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 101 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 9 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 896ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 409 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 101 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.