கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சார்பில் இளம் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு கல்லூரி கூட்டரங்கில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்வம்,கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் திவ்யா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை பேராசிரியர் ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்தார்
இதில் பாம்பே இடிஎப் நியூக்ளியர் ப்ராஜெக்ட் நிர்வாக இயக்குனர் முனைவர் காளிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்து சிறப்புரையாற்றினார்இதில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டி கேத்தலின் ராணி நன்றி கூறினார்


