தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளைப் பயன்படுத்த மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொறுப்பாசிரியர் ராஜகுமார் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி துணிப்பை பயன்படுத்தி அவசியத்தை எடுத்துக் கூறினார். ஆசிரியர் ஜெயிலின் நாம் ஏன் துணிப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த கருத்துக்களை எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் துணிப்பையே பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


