திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி கீழதைக்கால் தெரு ரஹ்மத் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக். அண்மையில் இக்கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு நடைபெற்றது. சிறப்பாக பணி செய்து வரும் ரஹ்மத் ரபீக்க்கு, ஜமாத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் அ. நாகூர்கனி, பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இதில், ஜமாத் பொருளாளர் என். அஜீஸ், தணிக்கையாளர் கே.பி.எஸ். முகம்மது உசேன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம். ரஹ்மத் புகாரி, எம். ஷேக்மைதீன், பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். முகம்மது முஜம்மில், துணை இமாம் அ. தாஜூத்தீன், ஜமாத் முன்னாள் தலைவர் என். நாகூர்மைதீன், மு. பீர்முகம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


