திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நடந்து வரும் பக்தர்கள் கால் கழுவுவதற்காக செயற்கை நீரோடை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடியோ அல்லது கடலில் கால் நனைத்து விட்டுத்தான் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று சுவாமியை வழிபடுவர். அவ்வாறு பக்தர்கள் ஈரக் கால்களுடன் கடற்கரையை கடந்து கோயிலுக்குச் செல்லும்போது, காலில் படும் மணலை சுத்தம் செய்வதற்காக கடற்கரை செல்லும் முகப்புப் பாதையில் செயற்கை நீரோடை அமைக்கப்பட்டுள்ளது.


