
ஸ்ரீவைகுண்டம் தாலூகாவுக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பஞ்சாயத்து தோறும் கூட்டம் நடத்தப்பட்டு வெளியூரில் இருந்து புதிதாக வந்தவர்களை தனிமை படுத்த வேண்டும் எனவும் அதற்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கிராம நிர்வாக அதிகாரி, பஞ்சாயத்து தலைவர்கள் , கிராம செவிலியர்கள் ஆகியோர் உள்ளனர். தினமும் ஒரு மணி நேரம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வெளியூர்களில் இருந்து வந்தவர்களை கண்காணித்து, மற்றும் பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸின் தீவிரம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பஞ்சாயத்து தோறும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ஆறாம்பண்ணையில் நடந்த கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அதிகாரி கமல்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கிராம காவலர் சரத்குமார், பஞ்சாயத்து எழுத்தர் ஹரிஹர சுந்தரம், கிராம செவிலியர்கள், ஊர் பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.