
மீனாட்சிப்பட்டியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சிபட்டியைச் சேர்ந்தவர் சுடலை மகன் ராஜமாணிக்கம்(42). இவர் 17.11.2020 தேதி 12 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்தார்.