
செய்துங்கநல்லூரில் பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி சார்பில் நாட்டு பணித்திட்ட முகாம் நடந்தது.
புற்நோய் விழிப்புணர்வு சிறப்பு முகாமையை யட்டி நடந்த சிறப்பு முகாமிற்கு கல்லூரி முதல்வர் மரியதாஸ் தலைமை வகித்தார். கல்லூரி அதிபர் முனைவர் ஹென்றி ஜெரோம், செய்துங்கநல்லூர் ஆர்.சி.பள்ளி தாளாளர் ஆரோக்கிய லாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்று நோய் விழிப்புணர்வு குறித்து நெல்லை புற்று நோய் குணமாக்கும் மையத்தினை சேர்ந்த டாக்டர் அபிராமி பேசினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உமர் ஜமால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாணவிகள் செல்வ ஆர்த்தி ,யாஸ்லின் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியை அமுத செண்பா, முத்துலெட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவி சண்முகப்பிரியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை முனைவர் பிரின்ஸி, முனைவர் சோபியா தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். இறுதியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.