

முறப்பநாடு கைலாசநாதர் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வல்லநாடு அருகே முறப்பநாடு கைலாசநாதர் நவகைலாயங்களில் ஒன்றாகும். சூரிய தலமான இந்த கோயில் முன்பு தாமிரபரணி ஆறு வடக்கில் தெற்காக பாய்வதால் தெஷ்ண கங்கை என்று போற்றப்படுகிறது.
பிரசித்த பெற்ற இந்த கோயிலில் தெஷ்ணமூர்த்தி மிகவும் விஷேசமாகும். இதனால் வியாழக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் கோயிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் தெஷ்ணமூர்த்தி சன்னதி முன்புள்ள உண்டியல் உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
நேற்று காலை கோயிலின் கதவு திறக்கப்பட்டிருப்பதை பார்த்த பக்தர்கள் உடனடியாக முறப்பநாடு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். முறப்பநாடு காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தடயஅறிவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பெருமாள் கோயிலில் திருடிய அதே நபர்கள் தான் இங்கும் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்திக்கின்றனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.