
செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். தென் சிதம்பரம் என போற்றப்படும் இந்த ஆலயத்தில் திருவிழா சப்பரப்பவனி நடந்தது-
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தினை போலவே இங்கு மார்கழி திருவிழா நடந்தது. ஆனால் ஆலயம் சிதிலமடைந்த காரணத்தினால் திருவிழாக்கள் நடைபெறவில்லை. இதற்கிடையில் பக்தர்கள் முயற்சியால் கோயில் சீரமைக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிசேகம் மிகச்சிறப்பாக நடந்தது. கடந்த ஆண்டு கொடிமரம் அமைக்கப்பட்டது. தற்போது திருவிழா நடத்த பக்தர்களால் திட்டமிடப் பட்டது.
சுமார் 100 வருடங்களுக்கு பிறகு 10 நாள் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்த காரணத்தினால் பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். இதற்காக கடந்த 23 ந்தேதி மாலை 6 மணி அளவில் புதிதாக ஏற்றப்படவுள்ள கொடியை ஊர்வலமாக பஞ்ச வாத்தியம் முழங்க ஊர்லமாக எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் அன்னதான சத்திரம் வழியாக மெயின்ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தது.
இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சிவன் மற்றும் சிவகாமியம்மாளுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பின் 24 ந்தேதிகாலை 11 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அதன் பின்தொடர்ந்து முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் ரிஷப வாகனத்திலும், 3 ம் நாள் சூரிய வாகனத்திலும, 4 வது நாள் பூத வாகனத்திலும், 5 நாள் ரிஷப வாகனத்திலும், 6 நாள் யானை வாகனத்திலும், 7 ம் நாள் கைலாய வாகனத்திலும் நடராஜர் வீதி உலா வந்தார்.
நேற்று 31 ந்தேதியை முன்னிட்டு எட்டாம் திருநாள் யாகசாலை பூஜைகள் ஆரம்பம் ஆனது. ஸ்ரீநடராஜர் பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் நடந்தது. பின ஸ்ரீமாணிக்கவாசகர் புறப்பாடு, மாணிக்க வாசக ர்நடராஜ பெருமானோடு ஐக்கியம் தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. சுவாமி பச்சை சாத்தி வீதி உலா வந்தார்.
நீண்ட நாள்களுக்கு பிறகு பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி வீதி உலா வந்த காரணத்தினால் பக்தர்கள் ஆர்வத்துடன் தரிசனம் செய்தனர். ஒன்பதாம் நாள் மற்றும் பத்தாவது நாள் தேர் வாகனத்திலும் நடராஜர் வீதி உலா வருகிறார். 11 ஆம் நாள் திருவிழா வை யொட்டி வருகிற 3 ந்தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. தொடர்ந்து நடராஜர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிசேகம் தீபாரதனை நடைபெறுகிறது. அதன் பின் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்த வாரி எடுத்து வருதலும் மாலை 5 மணிக்கு கொடி பட்டம் நிறைவு பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.