
சாத்தான்குளம் வட்ட தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
வட்டத்தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வேல்கனி வரவேற்றார். வட்டச் செயலர் தேவசமாதானம், கடந்த கால கூட்ட நடவடிக்கை பற்றி பேசினார். மாவட்ட செயலர் ராமமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் ஜெயபால் ஆகியோர் பேசினர். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. வரவு- செலவு கணக்குகளை பொருளாளர் ரூபவதி வாசித்தார்.
இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல 8 ஆவது ஊதியகுழு திருத்தப்பட்ட ஒய்வூதிய நிலுவைத்தொகையை 1.1.2016 முதல் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் பிறதுறையிலுள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் போல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். 3.2.2018 அன்று சங்க அமைப்பு தினம் கொண்டாடுவது எனவும், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சங்க கொடியேற்றுவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத்துணைத்தலைவர் அந்தோணி குழந்தை நன்றி கூறினார்.