
செய்துங்கநல்லூர் அருகே திருச்செந்தூர் மெயின்ரோட்டை கடக்க முயன்ற மலைபாம்பு பிடிபட்டது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் மலை பாம்புகள் பல சுற்றி திரிகின்றன். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் வந்து வற்றிய பிறகு மிக அதிகமான மலைபாம்பு ஓதுங்கும். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழதூதுகுழி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மலை பாம்பு ஒன்று கடக்க முயற்சி செய்தது. அப்போது அங்கே வந்த தூதுகுழியை சேர்ந்த மாரியப்பன், கருங்குளத்தினை சேர்ந்த வினோத் மணி ஆகியோர் அந்த மலை பாம்பை பிடித்தனர்.
அதன் பின் காவல் துறைக்கும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மலை பாம்பை பிடித்து வல்லநாடு மலையில் விட்டனர். அடிக்கடி வாகனங்கள் செல்லும் இடமாக இந்த இடம் உள்ளது. தற்போது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடைபயணம் செய்யும் பக்தர்கள் பலர் இந்த வழியாக கடந்து செல்கிறார்கள். அந்த நடுரோட்டில் மலை பாம்பு கடக்க முயன்றது இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.