தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணி நகர் சி.எம்.என். பாய்ஸ் கிளப் சார்பில் 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் பி.எஸ்.டி.எஸ்.டி. உதயசங்கர் நினைவு கோப்பைக்காக இந்தப் போட்டிகள் சின்னமணி நகர் பூங்காவில் நடைபெற்றன. இரண்டு நாட்கள் நடந்த இந்தத் தொடரில் தமிழகம் முழுவதிலிருந்து மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியை முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி மாரி பாய்ஸ் கிளப் அணி முதலிடம் பிடித்தது. சென்னை பனிமலர் அணி இரண்டாமிடம், கோவில்பட்டி லயன்ஸ் வாலிபால் கிளப் மூன்றாமிடம், தூத்துக்குடி கால்டுவெல் வாலிபால் கிளப் நான்காமிடம் பிடித்தன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பி.எஸ்.டி.எஸ். குரூப் ஆஃப் கம்பெனிஸ் இயக்குனர் டி. வேல்சங்கர் தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த மாரி பாய்ஸ் கிளப் அணிக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசு மற்றும் உதயசங்கர் நினைவு கோப்பையை மேயர் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த சென்னை பனிமலர் அணிக்கு ரூ. 25,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
முன்னதாக அபிலாஷ் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ் குமார், தொழிலதிபர் பிராங்கிளின், மேயர் நேர்முக உதவியாளர் ஜெஸ்பர் மற்றும் சி.எம்.என். வாலிபால் கிளப் நிர்வாகிகள் ராஜா, சச்சின் பெல், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


