தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் இறுதி வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் சராசரியாக 80.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 6 லட்சத்து 77 ஆயிரத்து 4 ஆண்கள், 7 லட்சத்து 10 ஆயிரத்து 981 பெண்கள், 201 இதரர் ஆக மொத்தம் 13 லட்சத்து 88 ஆயிரத்து 186 வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 982 பேரும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 587 பேரும், திருச்செந்தூரில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 933 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 268 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 756 பேரும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 660 வாக்காளர்கள் உள்ளனர்.
நேற்று காலை முதல் 6 தொகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வயதானவர்கள், இளைஞர்களும் ஆர்வமுடன் வந்தனர். மக்கள் குடும்பத்தோடு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை முதல் மதியம் வரை விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, மாலையில் மந்தமாக நடந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 80.54 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காலை 9 மணிக்கு 18.31 சதவீதமும், 11 மணிக்கு 37.39 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 54.08 சதவீதமும், மாலை 3 மணிக்கு 66.25 சதவீதமும், 5 மணிக்கு 78.33 சதவீதமும், 6 மணிக்கு 80.92 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
விளாத்திகுளம் தொகுதியில் காலை 9 மணிக்கு 16.51 சதவீதமும், 11 மணிக்கு 35.61 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 54.89 சதவீதமும், மாலை 3 மணிக்கு 68.90 சதவீதமும், 5 மணிக்கு 80.87 சதவீதமும், 6 மணிக்கு 84.16 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
திருச்செந்தூர் தொகுதியில் காலை 9 மணிக்கு 16.45 சதவீதமும், 11 மணிக்கு 34.77 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 51.29 சதவீதமும், மாலை 3 மணிக்கு 63.76 சதவீதமும், 5 மணிக்கு 76.14 சவீதமும், 6 மணிக்கு 78.89 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காலை 9 மணிக்கு 14.87 சதவீதமும், 11 மணிக்கு 33.55 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 51.26 சதவீதமும், மாலை 3 மணிக்கு 64.44 சவீதமும், 5 மணிக்கு 78.02 சதவீதமும், 6 மணிக்கு 81.04 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் காலை 9 மணிக்கு 16.29 சதவீதமும், 11 மணிக்கு 34.34 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 51.24 சதவீதமும், மாலை 3 மணிக்கு 63.43 சதவீதமும், 5 மணிக்கு 76.32 சதவீதமும், 6 மணிக்கு 79.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
கோவில்பட்டி தொகுதியில் காலை 9 மணிக்கு 17.05 சதவீமும், 11 மணிக்கு 35.12 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 52.66 சதவீதமும், மாலை 3 மணிக்கு 64.74 சதவீதமும், 5 மணிக்கு 76.16 சதவீதமும், 6 மணிக்கு 79.28 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.


