தூத்துக்குடியில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு, ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் அமைப்பின் சார்பில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சமூகப்பணி நிகழ்வில், அந்த வழியாகச் சென்ற 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குக் குளிர்ந்த நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைச் செயலாளர் அலன், தீபக், வீர கண்ணன் மற்றும் ஹாட்லி ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
இதில் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக கலந்துகொண்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றினர். கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ஜேசிஐ அமைப்பின் இந்த மனிதாபிமான முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


