சரண்யா மோகன் (பிறப்பு பிப்ரவரி19, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார்.சரண்யா கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் பிறந்தவர். பாலக்காட்டு மோகனின் முதல் மகளாவார்[2] இவரின் இளைய சகோதரியின் பெயர் சுகன்யா.


