கொரோனாநோய் வந்தாலும் வந்தது, வீடுகளில் பாதுகாப்பு குறைந்து விட்டது. இதற்கிடையில் நான் வசிக்கும் தெருவில் மிகப்பெரிய வீடு கட்டப்பட்டு , அந்த வேலை பாதியிலேயே இருப்பதால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாகி விட்டது. இவர்களை எப்படி கட்டுப்படுத்த என்றுதெரியவில்லை. இதற்கிடையில் ஊரடங்கு காலத்தில் உணவுக்காக மூன்று நாய் எங்கள் தெருவுக்கு வந்தது. என் மனைவி அதற்குத் தினமும் உணவு வழங்கினார். இதனால் தெருநாய் அப்படியே எங்கள் வீட்டு முன்பே அமர்ந்து விட்டது. அதன் பின் தெருவுக்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியாது. அந்த அளவுக்குக் காவல் பெருத்து விட்டது. இதில் ஒரு குட்டி நாய் ஒன்று முதுகில் வெட்டுப் பட்ட காயத்துடன் தெருவில் நின்றது. அதைப் பராமரித்து மருந்து போட்டு உணவு கொடுத்து அதையும் வளர்த்தார்கள். இந்த நாய் பெண் நாய் ஆகவே உரியக் காலத்தில் குட்டி போட ஆரம்பித்து விட்டது. அதுவும் 6 மாதத்துக்கு ஒரு முறை 7 குட்டிகள் வரை ஈன்றது. இதனால் பராமரிக்க முடியாமல் திணறிவிட்டோம். எனது மகளும் மகனும் பாவம் நம்ம வீட்டைத் தேடி வந்த நாய் அதைப் பராமரிப்போம் என்றனர். ஆனால் குட்டி நாய்களுக்கு வரும் விநோத நோய்கள் அதைத் தாக்கி உயிரிழக்க வைத்தது. இதற்கு மருத்துவம் செய்ய அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றால் யாருக்கும் சரியாக மருத்துவம் தெரியவில்லை. ராமையன் பட்டிதான் செல்லவேண்டும். அவ்வளவு தூரம் சென்று பராமரிக்க முடியாமல் பல நாய்கள் இறந்து விட்டது.
அதுவும் என்ன நோய் என்று தெரியவில்லை. தற்போது எங்கள் தெருவில் மூன்று நாய்கள் சேர்ந்து 21 குட்டிகள் போட்டிருந்தது. மூன்றே நாளில் அனைத்து குட்டிகளும் நோயால் இறந்தது. இதற்கிடையில் தான் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்திலிருந்து கே.டி.சி நகர் செல்லும் சாலையில் எஸ்.எஸ். கால்நடை மருத்துவ மனையைப் பார்த்தோம். மிகச்சிறப்பாக இருந்தது. கால்நடைகளுக்கு ( வீட்டு வளர்ப்பு மிருகங்களுக்கு) தேவையான அனைத்து பொருள்களும் அங்கே இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் நாய் பெருக்கத்தினை தடுக்க கருத்தடை அறுவைசிகிச்சையும் செய்தார்கள். அதன் டாக்டர் ராஜேஷ் அவர்களைச் சந்தித்தேன். நான் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என அறிந்தவுடன் நிறைய பேசினார். அவர் தூத்துக்குடி மாவட்டம் கீழமுடிமண்ணை சேர்ந்தவர். தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் படித்தவர். எம்.பி.பி.எஸ்க்கு முயற்சி செய்து,அதன் பின் கால்நடை மருத்துவராகப் பயின்று தற்போது இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார். அவரிடம் அரசு மருத்துவராக நீங்கள் ஆக வில்லையா எனக் கேட்ட போது, எனக்கு இந்த மருத்துவமனை மிகத் திருப்பதியாக உள்ளது. நாய் மற்றும் பூனைக்கு வேண்டிய அனைத்து நோய்க்கும் மிகச்சிறப்பாக மருத்துவம் பார்த்து வருகிறேன். இதுபோன்ற தனியார் மருத்துவமனை மதுரைக்குப் பிறகு நெல்லையில் இங்கு மட்டுமே உள்ளது. என்றார்.
அதோடு இந்த மருத்துவ மனையை மேலும் பெரிதாக்கி, ஸ்கேன் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தப் போவதாக அறிவித்தார். இதுவரை வீட்டு மிருகங்களுக்குத் தேவையான ஆலோசனை இன்றி தவித்த எங்களுக்கு அனைத்து ஆலோசனைகளையும் கூறினார்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. நிறைய நண்பர்கள் வீட்டில் பூனை மற்றும் நாய் வளர்த்து விட்டு அதைப் பராமரிக்க முடியாமல் தவித்தால் உடனே டாக்டர் ராஜேஷ் அவர்களின் எஸ்.எஸ். கால்நடை மருத்துவமனையை உடனே நாடுங்கள்.
எங்கள் நாய்க்கு அறுவைசிகிச்சையை மிகச்சிறப்பாக முடித்து விட்டு மனநிறைவுடன் வீடு வந்து சேர்ந்தோம். டாக்டர் ராஜேஷ் அவர்களுடன் பணி புரிந்தவர்களும் இன்முகத்துடன் உதவி புரிந்தனர். அனைவருக்கும் நன்றி.https://g.co/kgs/ccttYe



Thank you so much sir…
you are really great.