தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலரைப் பாராட்டி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட தெற்கு காவல் நிலைய குற்ற எண் 677/2026, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 130(1)-ன் கீழான வழக்கில் தொடர்புடைய எதிரிகளைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றிய போலீசாருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் காவலர் மாடசாமி ஆகியோரின் காவல் பணியினைப் பாராட்டும் பொருட்டு, இன்று அவர்களைத் திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு வரவழைத்து, காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.


