தூத்துக்குடியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்சாரி மகன் இப்ராஹிம் (31), கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் உமர்கயான் மகன் அப்துல் (39). இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று தூத்துக்குடி துறைமுகம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்களது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அப்துல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.