திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் சுற்றுப் பிரகாரத்தில் மேற்கூரை இல்லாததால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வெயிலில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Sakthi Murugan: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கூரை இல்லாததால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வெயிலில் பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பொது தரிசனம் செல்லும் மக்கள், பெரியவர்கள், கைக்குழந்தைகளுடன் கடும் வெயிலை சந்தித்து வருகின்றனர். பல கோடி வருமானம் வருமானத்தை அள்ளித்தரும் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து தராமல் தமிழக அரசும், அறநிலைத்துறையும் புறக்கணித்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


