
திருச்செந்தூரில் இரண்டாவது நாளாக திடீரென சுமார் 100 அடி உள்வாங்கி காணப்படும் கடல். பச்சை பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகின்றன.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.
இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருச்செந்தூர் கடல் பகுதியில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவது வழக்கம்.
இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. இன்று ஆரஞ்ச் அலெர்ட் டாக மாற்றப்பட்டுள்ளது.
இருந்தும் திருச்செந்தூரில் காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் திருச்செந்தூர் கடலுக்குள் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் கடல் சுமார் 70 அடி உள்வாங்கி காணப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் மாலையில் சுமார் 100 அடிக்கு உள்வாங்கி காணப்படுகிறது.
திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது.
கோவில் கடற்கரை பணியாளர்கள் மற்றும் போலீசார் கோவில் முன்புள்ள கடலில் நீராடும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடும் படி அறிவுறுத்தி வருவதுடன் கண்காணித்தும் வருகின்றனர்.