திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 4.97 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு பணி நடைபெற்றது. இப்பணியினை கோயில் தக்கார் ரா. அருள்முருகன் தலைமை வகித்து பார்வையிட்டார்.
இதில், ரூ. 4,97,70,918 பணம், 1,071 கிராம் தங்கம், 31,811 கிராம்வெள்ளி, 2,40,880 கிராம் பித்தளை, 27,240 கிராம் செம்பு, வெளிநாட்டு கரன்சிகள் 1,296 இருந்தது. இப்பணி இணை ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.


