
எட்டயபுரம் அருகே ஓடை பாலத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள பிதப்புரம் கிராமத்தை சேர்ந்த ஞானதுரை மகன் அஜய் (18). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் பைக்கில் வீட்டிலிருந்து எட்டயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பாேது எதிர்பாராத விதமாக பிதப்புரம் அருகில் உள்ள ஓடைப்பாலத்தில் பைக் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.