கருங்குளம் அருகே வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகின.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கருங்குளம் அருகே திடீரென வாழைத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீ வேகமாகப் பரவியது.
இதில், சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் நாசமாகின. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், வாழைகள் எரிந்து நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.


