
சாத்தான்குளம் பகுதியில் புலி நடமாடுவதாக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக வதந்தி பரவி வருகிறது. இதற்கு திருச்செந்தூர் வன வரம்பு அலுவலர்ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சாத்தான்குளம் கிராம பகுதியில் புலி வந்து மக்களை தாக்கி வருவதாகவும், 3பேரை கடித்து குதறியதாகவும் சாத்தான்குளம், திருச்செந்தூர் வலைதளங்களில் பதிவாகி வைரலாகி வந்தது. இது சமூகதள மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கும் புகார் வந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் வன வரம்பு அலுவலர் ரவீந்திரன் கூறியிருப்பதாவது, “கடந்த இரண்டு நாட்களாக சாத்தான்குளத்தில் உள்ள வாட்ஸ்ஆப்- பதிவுகளில் புலி தாக்குதல் குறித்த செய்திகள் வருகின்றன.
ஆனால் உண்மை என்னவென்றால், புலிகள் மனிதர்களை தாக்கியதாக வெளியான செய்திகள் போலியானவை, உண்மையல்ல, கடந்த வாரம் அவிநாசி தாலுகா பாப்பான்குளத்தில் சிறுத்தைப்புலி மனிதர்களை தாக்கியது. திருப்பூர் மாவட்டம் மற்றும் விலங்கை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். வனத்துறையினர் உன்னிப்பாக கவனித்து, மனிதர்கள் மற்றும் பிற வீட்டு விலங்குகளை எந்த தாக்குதலில் இருந்தும் காப்பாற்றுவார்கள் என்பதால், பீதி அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.