
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பலத்தெருவில் ரூ.15.5லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சி பூங்காவை புனரமைக்கும் பணிகளை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருணாநிதிநகர், இரண்டாவது குறுக்கு தெரு, குயவர் தெரு, அரசாழ்வார் கோவில் கீழத் தெரு, தேவர்சந்து, சந்தையடி தெரு, உள்ளிட்ட தெருக்களில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் துவங்கி வைத்தார்.
பின்னர் ஸ்ரீவைகுண்டம் மேலக்கோட்டைவாசல் தெரு, 1வது குறுக்கு தெரு, 3வது குறுக்கு தெரு, பெரும்பத்து வடக்கு தெரு முதல் குறுக்கு தெரு வரையும் மற்றும் வன்னியர் தெரு, மேற்கு குறுக்கு தெரு, லட்சுமிபுரம், மேற்கு சிவன் கோயில் சந்து தெரு, அருந்ததி காலனி நலராஜபுரம் கிழக்கு தெரு மேற்கு சவலககாரர் தெரு உள்ளிட்ட ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தெருக்களில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வட்டார தலைவர் நல்லகண்ணு, மாவட்டபொதுச் செயலாளர் சங்கர், நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் பொறுப்பாளர் கருப்பசாமி, நகரதலைவர் சித்திரை வட்டார துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வெள்ளுர் அலங்கார பாண்டியன், சிவகளை பிச்சையா, முன்னாள் வட்டாரத்தலைவர் சிங்கப்பன், நகர செயலாளர் நிலமுடையான் நகர இளைஞரணி தலைவர் மகாராஜன், சொரிமுத்து பிரதாபன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன் மாவட்ட மகளிரணி தலைவி சிந்தியா, சேவாதல மாவட்ட தலைவர் பிச்சை கண்ணன், வட்டார தலைவர்கள், கோதண்டராமன், தாசன், சற்குரு, சொரிமுத்து பிரதாபன், மாவட்ட துணைத்தலைவர் சங்கர், நகர இளைஞர் காங்கிரஸ் மகாராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.