
செய்துங்கநல்லூரில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
வாசகர் வட்ட துணை தலைவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். ஒய்வு பெற்ற சுகாதர துறை அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
செல்லப்பா வரவேற்றார். பள்ளி மாணவ மாணவிகளிடையே வாசிப்பு வழக்கத்தினை கூட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டது. கருவூல அலுவலர் சிவராமன், மணக்கரை போஸ்ட மாஸ்டர் காளிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுடலைமணி செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் துரை ராஜ் நன்றி கூறினார்.