
செய்துங்கநல்லூர் நூலகத்தில் பாளை ஊசிக்கோ புரம் , கொங்கராயகுறிச்சி ஆலயம் கட்டிய ரேணியஸ் அடிகளார் 221வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் தாமிரபரணி கரையில் 100க்கு மேற்பட்ட கல்வி நிலையங்கள், ஆலயங்களை உருவாக்கியவர் ரேணியஸ் அடிகளார். இவர் பாளையங்கோட்டை ஊசிக்கோ புரம் கட்ட அடிக்கல் இட்டவர். ஆற்று வெள்ளத்தில் கொங்கராயகுறிச்சி அழிந்த போது, மீண்டும் குடியிருப்புகளை உருவாக்கி இங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தினை கட்டியவர். வசவப்பபுரத்தில் பள்ளிக்கூடம் அமையக் காரணமாக இருந்தவர். இவரது 221வது பிறந்த நாள் விழா செய்துங்கநல்லூர் நூலகத்தில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். உதவி செயலாளர் கோபால் வரவேற்றுப் பேசினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ரேணியஸ் அடிகளார் பற்றி உரையாற்றினார். நூலகர் லெட்சுமண குமார் நன்றி கூறினார். முன்னதாக ரேணியஸ் புகைப்படத்திற்கு பூ தூவி வணக்கம் செலுத்தினர்.