
கருங்குளம் ஒன்றியம் ஆறாம் பண்ணையில் நடப்பு ஆண்டில் 1000க்கு மேற்பட்ட பனை விதைகளைத் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் பண்ணை பஞ்சாயத்துத் தலைவராக பணியாற்றி வருபவர் சேக்அப்துல்காதர். இவர் பசுமை விரும்பியாகச் செயல்பட்டு வருகிறார். ஆதிச்சநல்லூர் பொருநை தொல்லியல் கழகத்திலும் இயங்கி தமிழரின் தொன்மையை வெளிக்கொணரப் பாடுபட்டுவருகிறார். கடந்த ஆண்டு அப்15 ந்தேதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் பனை மர விதைகளை நட்டார். அந்த விதைகள் தற்போது தளிர்விட்டு நிற்கிறது. இந்த ஆண்டும் இதே போல் ஆறாம்பண்ணைககு உள்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் 1000க்கு மேற்பட்ட பனை விதைகளை நடவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான அடிப்படை வேலைகளான பனை விதை சேகரிப்பு பணியை அவர் துவங்கினார். அவருடன் ஆறாம் பண்ணை சமூக நல ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.