ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்கற்குளம் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவினர் சனிக்கிழமை பொறுப்பேற்றனர்.
ஆழ்வார்திருநகரி கூட்டுறவு பண்டக சாலைக்கு இயக்குநர்களாக ஆதிநாதன், ராஜப்பா வெங்கடாச்சாரி, தர்மர், முருகன், வீரபாகு, வேதவல்லிலி, மங்கள தீபரேகா ஆகிய 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தலைவராக பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆதிநாதன், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு பண்டகசாலை செயலர் சீனிவாசராகவன், கூட்டுறவுப் பணியாளர்கள் வீரராகவன், மணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், ஆழ்வார்கற்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர்களாக, அய்யாத்துரை பாண்டியன், அஸ்வதி, ஷேக்அப்துல்காதர், கள்ளவாண்டன், ராமையா, மாடசாமி, சரோஜா, செய்யதுபாத்திமா, மூக்கன், முத்தையா, ஜாகீர் உசேன் ஆகிய 11பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவராக அதிமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியனும், துணைத் தலைவராக அஸ்வதியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகக் குழுவினருக்கு சங்கச் செயலர் கிருஷ்ணன், கணக்காளர் தம்பு, மணக்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் நம்பிராஜன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


