
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக வேகமாக செல்ல வேகக் கட்டுப்பாடு பற்றி கலெக்டர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது…தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 112, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் 1989 விதி 370-ன்படி மாவட்ட மாநில தேசிய நெடுஞ்சாலைகளில்; கீழ்க்கண்டவாறு வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமதாரர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவிப்பு
1. தூத்துக்குடி – திருச்செந்தூர்; – கன்னியாகுமரி சாலையில் டிசிடபிள்யு முன் உள்ள சாலைக்கு 40 kmph என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. தூத்துக்குடி மாநகர எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலைகளில் 40kmph எனவும் பிற சாலைகளில் 35kmph எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய நகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் வேக வரம்பு 40kmph என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. எப்சிஐ ரவுண்டானாவிலிருந்து புதுக்கோட்டை வரை உள்ள (என்எச் 138) நெடுஞ்சாலையில் வேக வரம்பு 60kmph ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
5.NH45B குறுக்குச்சாலை பகுதியிலும் எட்டயபுரம் அருகில் விளாத்திகுளம் பிரிவு சாலை பகுதியிலும், இசிஆர் பிரிவு சாலை பகுதியிலும் வேக வரம்பு 60kmph ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
6. ஆழ்வார்திருநகரியில் செல்லும் ளுர்40 சாலையில் ஊருக்குள் செல்லும் சாலையில் 30மஅph ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7. SH40y குரும்பூர் ஊர் எல்லைக்குள் செல்லும் பகுதிக்கு வேகவரம்பு 30kmph ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8. அனைத்து பேரூராட்சிகளில் மற்றும் தாலுகா தலைமையிடங்களில் செல்லும் சாலைகளில் 30kmph ஆக வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9. திருச்செந்தூர்-பாளையங்கோட்டை சாலையில் குமாரபுரம் முதல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வரை 30kmph என வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10. தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவிலிருந்து முள்ளக்காடு வரை 40kmph ஆக வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் மாவட்ட மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கண்ட வேக வரம்பினை பின்பற்றி சாலை விபத்துகளை தவிர்க்குமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.