செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தினவிழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துறை தலைவர்கள் அமலன், வெங்கடேஷ், ஜான்ஸ் செண்பகதுரை, ரோசால் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர் வரவேற்றார். தேசியகொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு செய்தி வழங்கப்பட்டது. விழாவில் மூத்த விரிவுரையாளர்கள் சந்திரசேகர், முகம்மது பாரூக், அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் ராகுல் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் கல்லூரியில் ஊழியர்கள் செய்திருந்தனர்.