
செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய கூட்ட அரங்கில் பாரத பிரதமர் பசுமை வீடு வழங்கும் திட்ட பயனாளிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பசுமை வீடு திட்டம் மூலமாக வீடு கட்டும் பயனாளிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. ஒன்றிய பொறியாளர் செல்வபாக்கியம், கீதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , பணிப்பார்வையாளர், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.