
கருங்குளத்தில் தாமிரபரணி நதிக்கு பிறந்த நாள் பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் தாமிரபரணியை காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதி. ஒரே மாவட்டத்தில் ஓட கூடிய நதி. பல கோடி லிட்டர் தண்ணீரை தினமும் நெல்லை, தூத்துக்குடி விருதுநகர் மாவட்டத்துக்கு தரக்கூடியது. தாகத்தினை போக்கும் நதிக்கு தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்த நாள் விழா என கூறுகிறார்கள். அகத்திய பெருமான் இன்று தான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. எனவே இதற்கான கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்று பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.
கேப்டன் ஆறுமுகம் தலைமை வகித்தார். மணக்கரை போஸ்டர் மாஸ்டர் காளிமுத்து, ஆறாம்பண்ணை சேக் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தார். மூத்த நாடக கலைஞர் அருணாசலம் தாமிரபரணிக்கு பூ தூவினார். அதன்பின் தாமிரபரணி ஆற்றினை பாதுகாக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.